சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை - தமிழ்மிரர்


சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை

 நன்றி தமிழ்மிரர் www.tamilmirror.lk
சிங்கள மொழி மூல அல்குர்ஆன் விளக்கவுரை நூல் (தப்ஹீமுல் குர்ஆன்) வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்;த செனவிரத்னவும் சிறப்பு  பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம.;சுக்ரியும் உரை நிகழ்த்தினர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன